» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் : மீனவர்கள் மகிழ்ச்சி!
சனி 20, ஏப்ரல் 2024 5:08:45 PM (IST)
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் எதிரொலியாக திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் காரணமாக விசைப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், திரேஸ்புரம் நாட்டுபடகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் கரை திரும்பின. இன்று காலை முதலே திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.
இதன் காரணமாக மீன்களின் விலை அதிகரித்தது. சீலா மீன் ஒரு கிலோ 1200 ரூபாய் வரையும், விளமீன் கிலோ 500 ரூபாய் வரையும், ஊளி மீன் கிலோ 500 ரூபாய் வரையும், பாறை மீன் கிலோ 400 ரூபாய் வரையும், சூரை மீன் கிலோ 200 முதல் 250 ரூபாய் வரையும் விற்பனையானது. மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. மேலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
மண்ணின் மைந்தன்Apr 20, 2024 - 06:21:29 PM | Posted IP 172.7*****