» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 18, ஏப்ரல் 2024 3:49:16 PM (IST)
ரூ. 4 கோடி பணம் சிக்கிய வழக்கில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தாம்பரம் போலீசார் நடத்திய தொடா் விசாரணையில், அந்த ரூ. 4 கோடி பணம் நயினாா் நாகேந்திரனுடையது என முதல்கட்ட தகவல் வெளியாகியது. இது குறித்து போலீசார் வழக்குப் பந்துள்ளனா். இந்த நிலையில், நயினாா் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளா் ராகவன் அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், நயினார் நாகேந்திரன் தொடர்புடைய வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த வழக்கில் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீனவர் கொலை வழக்கில் 3பேர் கைது!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:31:37 AM (IST)

கோவில்பட்டியில் உலக புத்தக தினவிழா!
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:17:30 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அதிகாரிகள் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான மனு தள்ளிவைப்பு
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:04:39 AM (IST)

செபத்தையாபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அசன விழா
வியாழன் 24, ஏப்ரல் 2025 10:54:41 AM (IST)

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 24, ஏப்ரல் 2025 10:20:26 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.1,183 கோடியாக உயர்வு : நிர்வாக இயக்குனர் தகவல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:20:38 AM (IST)
