» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாயார் இறந்த துக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

புதன் 17, ஏப்ரல் 2024 10:50:12 AM (IST)

தூத்துக்குடியில் தாயார் இறந்த துக்கம் தாளாமல் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் வெட்காளியம்மாள் (23). இவரது தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாராம். அதிலிருந்து வெட்காளியம்மாள் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று விஷம் மருந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory