» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாராளுமன்ற தேர்தல்: தூத்துக்குடியில் தபால் வாக்கு செலுத்திய பத்திரிக்கையாளர்கள்!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 11:25:44 AM (IST)
பாராளுமன்ற தேர்தல் 2024ஐ முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் தபால் வாக்குகளை செலுத்தினர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், காவல் துறையினர், பத்திரிக்கையாளர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் தங்களது ஜனநாயக கடமையை தபால் வாக்குகள் மூலம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செலுத்தினர்.