» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு : தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 8:17:20 AM (IST)
தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவன சட்ட ஆலோசகா் வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருடிய மா்ம நபா்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சோ்ந்த மாயாண்டி மகன் பொன்ராஜ் (40). தனியாா் ஷிப்பிங் நிறுவன சட்ட ஆலோசகா். இவா் கடந்த 10-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றாராம். பின்னா் இவா் நேற்று முன்தினம் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த ரூ.26 ஆயிரம் ரொக்கம், 3 கிராம் தங்க மோதிரம், வைர காதணி, வெள்ளி பொருள்கள் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் வடபாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி பணம், நகைகளைத் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 11:23:48 AM (IST)

தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை
செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)
