» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

சனி 13, ஏப்ரல் 2024 11:14:00 AM (IST)

தூத்துக்குடி அருகே தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள கீழசெக்காரக்குடி கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் முருகன் (46). இவர் கடந்த 11ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்று காலை அங்குள்ள முனியசாமி கோவில் அருகில் உள்ள ஒரு தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தட்டப்பாறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகன் எப்படி இறந்தார்? குளிக்கும் போது கால் தவறி உள்ளே விழுந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory