» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வலியுறுத்தி தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த முடிவு!
வெள்ளி 12, ஏப்ரல் 2024 7:59:19 PM (IST)
பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வலியுறுத்தி தீப்பெட்டி ஆலைகளில் 10 நாள் உற்பத்தி நிறுத்தம் செய்ய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
![](https://tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/matchboxi43i34ii_1712932300.jpg)
ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக தீப்பெட்டி தொழிலுக்கு பிரச்சினை வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை 20 தீப்பெட்டி விற்பனையை தடை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையெடுத்து கடந்த ஆண்டு ரூ.20க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்தியரசு தடை விதித்தது.
இருந்த போதிலும் சீனாவில் இருந்து நோபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் திருட்டுத்தனமாக கொண்டு வரப்பட்டு விற்பனை ஜோரூராக நடைபெற்று வருகிறது. ரூ 8 முதல் 10 வரை பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இந்நிலையில் நாளை முதல் வரும் 22ந்தேதி வரை தீப்பெட்டி ஆலைகளில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்துவது என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு எடுத்து இருப்பதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனது.
இதனால் பகுதி மற்றும் முழு இயந்திரம் என சுமார் 700 தீப்பெட்டி ஆலைகள் மூடப்படுவது மட்டுமின்றி, 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும், நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில் இந்த தொழில் நலிந்து போவதற்கு ஒரு முறைபயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்கள் ஒரு காரணமாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகள் லைட்டர்கள ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தி, விறப்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக வாங்கி பொருள்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 10நாள்கள் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/kanimozhiarpattmtut_1722062791.jpg)
மைனாரிட்டி பாஜக அரசின் பட்ஜெட்டால் மக்களுக்கு பயனில்லை - கனிமொழி தாக்கு!
சனி 27, ஜூலை 2024 11:57:32 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/hangsuici434i_1722058706.jpg)
டெய்லர் தூக்குபோட்டு தற்கொலை!
சனி 27, ஜூலை 2024 11:08:28 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/arrestimage_1722058405.jpg)
லாரி செட் உரிமையாளரிடம் பண மோசடி செய்தவர் கைது!
சனி 27, ஜூலை 2024 11:04:26 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/tuty_corpor_1522394831_1722058161.jpg)
தூத்துக்குடி மாநகர் முழுவதும் சுகாதாரப் பணிகள்: தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வலியுறுத்தல்!
சனி 27, ஜூலை 2024 10:59:24 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/thiruvilakku4_1722057696.jpg)
மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
சனி 27, ஜூலை 2024 10:50:52 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/crimearrest_1722057120.jpg)
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி மீது தாக்குதல் : வாலிபர் வெறிச்செயல்!
சனி 27, ஜூலை 2024 10:42:26 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/emp34o43i_1722056525.jpg)