» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை முயற்சி, கஞ்சா வழக்குகளில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 3:12:50 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் பாலம் அருகே கடந்த 13.03.2024 அன்று ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் செய்துங்கநல்லூர் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த பேச்சி மகன் பொன்இசக்கி (எ) நரி (23) என்பவரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

கடந்த 13.03.2024 அன்று புதுக்கோட்டை தேரி ரோடு பகுதியில் கஞ்சா விற்பனையில்  ஈடுபட்ட வழக்கில் தெய்வச் செயல்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயன் மகன் பேச்சிமுத்து (19) என்பவரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 6 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

மேற்கண்ட வழக்குகளில் கைதான பொன்இசக்கி (எ) நரி மற்றும்  பேச்சிமுத்து  ஆகிய 2 பேரையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர்  கோ. லட்சுமிபதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 2பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory