» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோட்டார் சைக்கிள் விபத்தில் காவலாளி பலி

புதன் 3, ஏப்ரல் 2024 8:19:05 AM (IST)

விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (52). இவர் எட்டயபுரம் அருகே நீராவிபுதுப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு காலையில் திரும்பி வருவது வாடிக்கை. இதன்படி, இவர் நேற்று காலையில் பணியை முடித்துவிட்டு, நீராவிபுதுப்பட்டி கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

பிள்ளையார்நத்தம் அருகே சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடியது. இதில் மோட்டார் ைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சுடலைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள சுடலைமுத்து வீட்டிற்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education






New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory