» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில், 14 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
புதன் 3, ஏப்ரல் 2024 8:14:01 AM (IST)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 14 நாட்களுக்கு பிறகு நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகுகள் இரவு நேரங்களில் இழுவலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாகவும், மீன்பிடி தடைக்காலத்திலும் கேரளா மீனவர்கள் தூத்துக்குடி கடலில் மீன்பிடிப்பதாலும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி விசைப்படகு மீனவர்கள் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 26 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த கேரளா, மற்றும் குளச்சலை சேர்ந்த மீனவர்கள் 86 பேரையும், 6 படகையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். மேலும் மீனவர்களும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தினர்.
இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகு புனிதவெள்ளி, ஈஸ்டர் பண்டிகை உள்ளிட்டவை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். 14 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலையில் மொத்தம் 89 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனால் தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்
வியாழன் 19, ஜூன் 2025 11:50:55 AM (IST)

தூத்துக்குடியில் கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை!
வியாழன் 19, ஜூன் 2025 10:49:32 AM (IST)

நூறு அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்!
வியாழன் 19, ஜூன் 2025 10:37:54 AM (IST)
