» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பறக்கும்படை சோதனையில் ரூ.15.69 லட்சம் மதிப்புள்ள 185 சேலைகள் பறிமுதல்!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:16:03 PM (IST)

விளாத்திகுளம் அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.15 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 185 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சென்னம ரெட்டியபட்டி சோதனைச் சாவடியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடுதல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரையில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.15 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 185 சேலைகள் இருப்பது தெரியவந்தது.
வாகனத்தில் வந்த அந்நிறுவனத்தின் ஊழியரான மதுரையைச் சேர்ந்த அடைக்கலராஜ் மகன் ரோவினஸ் ஆரோக்கியசாமி (43) என்பவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா, வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் விளாத்திகுளம் அரசு சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
