» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலியோ இல்லாத மாநகரை உருவாக்குவோம் : மேயர் ஜெகன் பெரியசாமி

ஞாயிறு 3, மார்ச் 2024 11:51:43 AM (IST)



தூத்துக்குடியில் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 138 க்கும் மேற்பட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 25460 மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் மகாம்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் அமைந்துள்ள பிஹெச் சென்டரில் மேயர் ஜெகன் பெரியசாமி சொட்டு மருந்தினை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகர மக்கள் தங்கள பகுதிகளில் நடைபெறும் முகாமில் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மறக்காமல் போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து போலியோ இல்லாத ஒரு மாநகரத்தை உருவாக்குவோம் என்று உறுதி ஏற்போம் என்றார். 

நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் சுமதி, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்டகழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான தெய்வேந்திரன், வட்ட பிரதிநிதி பேச்சிமுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory