» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாயால் வடை சுடுகிறார் அண்ணாமலை : அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
ஞாயிறு 3, மார்ச் 2024 11:25:18 AM (IST)

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகின்றார் என்று அமைச்சர் கீதாஜீவன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்தை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவை குறை சொல்வதே வேலையா போச்சு. அப்போது தான் அவரை பற்றிய செய்திகள் வரும் அதனால் அப்படி பேசி வருகின்றார்.
மத்திய அரசின் திட்டம் எது மாநில அரசின் திட்டம் எது என்று கூட அவருக்கு தெரியவில்லை. தோல்வி பயத்தில் உலறி வருகின்றார். பேசுவது உண்மையா பொய்யா என்று கூட தெரியாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசி வருகின்றார். எல்லோரும் நம்மை கவனிக்க வேண்டும் என்று எதை எதையோ பேசுகிறார். வாயால் வடை சுடுகின்றார் என்றால் அது அண்ணாமலைக்குதான் பொருத்தமாக இருக்கும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
