» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாயால் வடை சுடுகிறார் அண்ணாமலை : அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

ஞாயிறு 3, மார்ச் 2024 11:25:18 AM (IST)



தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகின்றார்  என்று அமைச்சர் கீதாஜீவன் விமர்சித்துள்ளார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து  நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்தை வழங்கினார்.  பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவை குறை சொல்வதே வேலையா போச்சு. அப்போது தான் அவரை பற்றிய செய்திகள் வரும் அதனால் அப்படி பேசி வருகின்றார். 

மத்திய அரசின் திட்டம் எது மாநில அரசின் திட்டம் எது என்று கூட அவருக்கு தெரியவில்லை. தோல்வி பயத்தில் உலறி வருகின்றார்.  பேசுவது உண்மையா பொய்யா என்று கூட தெரியாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசி வருகின்றார். எல்லோரும் நம்மை கவனிக்க வேண்டும் என்று எதை எதையோ பேசுகிறார். வாயால் வடை சுடுகின்றார் என்றால் அது அண்ணாமலைக்குதான் பொருத்தமாக இருக்கும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory