» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அற்புத விடுதலை பிரார்த்தனை: சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் நடந்தது!!

வியாழன் 29, பிப்ரவரி 2024 4:43:29 PM (IST)



நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பில் அற்புத விடுதலை பிரார்த்தனை சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பில் குரும்பூர் இரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலை பிரார்த்தனைக் கூட்டம் இன்று வியாழக் கிழமை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இயேசு விடுவிக்கிறார் பாடல் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர். 

இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் சிறப்பு செய்தி கொடுத்து வியாதியஸ்தர்களுக்காக எனண்ணைய் பூசி சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுத்தார். பிரார்த்தனைக் கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளாக மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory