» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அற்புத விடுதலை பிரார்த்தனை: சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் நடந்தது!!
வியாழன் 29, பிப்ரவரி 2024 4:43:29 PM (IST)

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பில் அற்புத விடுதலை பிரார்த்தனை சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பில் குரும்பூர் இரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலை பிரார்த்தனைக் கூட்டம் இன்று வியாழக் கிழமை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இயேசு விடுவிக்கிறார் பாடல் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர்.
இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் சிறப்பு செய்தி கொடுத்து வியாதியஸ்தர்களுக்காக எனண்ணைய் பூசி சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுத்தார். பிரார்த்தனைக் கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளாக மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் உடன் ஊழியர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)
