» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன்பிடி துறைமுகத்தில் படகில் தீவிபத்து - தூத்துக்குடியில் பரபரப்பு!!

திங்கள் 26, பிப்ரவரி 2024 5:34:03 PM (IST)



தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நிறுத்தியிருந்த படகில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இன்று மாலை 4:30 மணியளவில் போட் யார்டில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் வெல்டிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென படகில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory