» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10லட்சம் மதிப்புள்ள பூச்சிமருந்து, பீடி இலைகள் பறிமுதல்!

சனி 24, பிப்ரவரி 2024 8:00:16 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், பூச்சி மருந்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள், பீடி இலை, கஞ்சா உள்ளிட்டவை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மொட்ட கோபுரம் கடற்கரையில் வைத்து கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் ராமர் இருதயராஜ் ஆகியோர் இன்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

அப்போது அதில் 300 கிலோ பீடி இலை, 425 கிலோ கட்டிங் செய்த பீடி இலை, பூச்சிகொல்லி மருந்து 17 பண்டல் இருந்தது. இதனை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10லட்சம் ஆகும். இதையடுத்து பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து

சதீஷ் குமார்Feb 25, 2024 - 07:14:04 AM | Posted IP 172.7*****

எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்💐💐💐💐💐

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory