» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள்: அமைச்சர்கள் ஆய்வு
வெள்ளி 23, பிப்ரவரி 2024 5:29:28 PM (IST)
தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 25ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை வந்து சிப்காட் வளாக பர்னிச்சர் பார்க் அருகே அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். மேலும், சூசைபாண்டியபுரம் மங்களகிரி விலக்கு அருகே நலதிட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
இதையொட்டி விழா மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்தசேகரன், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், திமுக நிர்வாகிகள் உமரி சங்கர், கே.பி. ராஜா ஸ்டாலின், வழக்கறிஞர் செல்வகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.