» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி நூலாசிரியருக்கு பசுமை விருது
வெள்ளி 23, பிப்ரவரி 2024 5:17:53 PM (IST)

கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் 119வது பன்னாட்டு ரோட்டரி தினத்தை முன்னிட்டு நூலாசிரியர் ஜெகஜோதிக்கு ரோட்டரி பசுமை விருது வழங்கப்பட்டது.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரும், கோவில்பட்டி பசுமை இயக்கத்தின் தலைவருமான ஜெகஜோதி எழுதிய இயற்கை எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 30ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. இந்நிலையில் இயற்கை நூலாசிரியர் ஜெகஜோதிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரோட்டரி பசுமை விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துசெல்வன், சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் கலந்துகொண்டு இயற்கை நூலாசிரியர் ஜெகஜோதிக்கு ரோட்டரி பசுமை விருது வழங்கி பாராட்டினார். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சரவணன், ராஜமாணிக்கம், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)
