» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஆயுஷ் பிரிவுகளில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:58:20 PM (IST)

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. மாவட்ட திட்ட மேலாளர் (காலிப்பணியிடம்-1), 

கல்வித்தகுதி: சித்த மருத்துவ பட்டப் படிப்பில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் கனிணி தொடர்பான சான்றிதழ் படிப்பு 

வயது: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒப்பந்த மாத ஊதியம்: ரூ.40,000-

2. தரவு உதவியாளர் (காலிப்பணியிடம்-1) கல்வித்தகுதி: இளங்கலை பட்டப் படிப்புகள் (B.Sc (IT)/BCA/BBA / B.Tech (CS)) மற்றும் கனிணி தொடர்பான சான்றிதழ் படிப்பு 

வயது: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஒப்பந்த மாத ஊதியம்: ரூ. 15,000-

இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. எக்காரணம் கொண்டும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் (www.thoothukudi.nic.in) வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவண நகல்களுடன் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், தூத்துக்குடி - 628 003 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:09.03.2024 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory