» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையோர மணல் குவியல்களை அகற்றும் இயந்திரங்கள் : மேயர் ஆய்வு!

புதன் 21, பிப்ரவரி 2024 5:17:50 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர மணல் குவியல்களை அகற்றுவதற்கு 10 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இந்த இயந்திரங்களை மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தி என்டு என்டு என்ற முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் மாநகரை தூய்மையாகவும் மாசில்லாமலும்  வைத்திருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 

அதில் ஒரு பகுதியாக சாலை ஓரத்தில் குவியும் மணல்களை அகற்றுவதற்கு முதற்கட்டமாக 10 மணல் அகற்றும் இயந்திரங்களை வாங்கியுள்ளோம். மேலும் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன்,மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

NameFeb 22, 2024 - 06:39:31 AM | Posted IP 172.7*****

Machine rate yevlo

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory