» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகளுக்கான குறும்படங்கள்: அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்!
திங்கள் 12, பிப்ரவரி 2024 4:23:35 PM (IST)

குழந்தைகள் பெற்றோருடன் குடும்பமாக வளர்வதன் முக்கியத்துவத்தை பற்றியும், வளர்ப்புப் பராமரிப்பு சேவையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்டுள்ள "விதை” மற்றும் "நிழல்" ஆகிய இரு குறும்படங்களை அமைச்சர் பி. கீதா ஜீவன் வெளியிட்டார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் சமூகப் பாதுகாப்புத்துறை, யூனிசெப் (UNICEF) மற்றும் சியாப் (SIAPP) அமைப்பும் இணைந்து குழந்தைகள் பெற்றோருடன் ஒரு குடும்பமாக வளர்வதன் முக்கியத்துவத்தை பற்றியும், வளர்ப்புப் பராமரிப்பு சேவையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் குடும்ப அமைப்பில் வளர்வதை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள "விதை” மற்றும் "நிழல்" ஆகிய இரு குறும்படங்களை சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசுச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர் இரா.சீதாலட்சுமி, இணை இயக்குநர் தனசேகர பாண்டியன் மற்றும் சியாப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சியாமளா நடராஜ், திட்ட இயக்குநர் கே.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, மார்ச் 2026 10:26:43 AM (IST)

கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 8:15:19 AM (IST)

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!
திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

மதிமுக மாநில நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
திங்கள் 9, மார்ச் 2026 8:00:44 AM (IST)

சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:44:39 PM (IST)

தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:41:54 PM (IST)







