» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுபோதையில் பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது!
திங்கள் 12, பிப்ரவரி 2024 3:19:03 PM (IST)
முறப்பநாடு அருகே மதுபோதையில் தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிழக்கு தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கி பாண்டி (34) என்பவர் நேற்று வல்லநாடு கலியாவூர் மெயின்ரோடு பகுதியில் ஒரு தனியார் பேருந்தை இயக்கி வந்த போது அங்கு மதுபோதையில் வந்த வல்லநாடு கலியாவூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சின்னதுரை (எ) துரை (43) என்பவர் மேற்படி பேருந்தை வழிமறித்து இசக்கி பாண்டியிடம் தகராறு செய்து தவறாக பேசியதுடன் பேருந்தின் முன்பக்க கண்ணாடியும் கல்லால் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநரான இசக்கி பாண்டி அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து மேற்படி சின்னத்துரை (எ) துரையை கைது செய்தார். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
