» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 11, டிசம்பர் 2023 5:16:35 PM (IST)
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்: மாணவ/மாணவியர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். 2023 -24 ஆம் ஆண்டில் https://Scholarships.gov.in/public/FAQ/topclass _school_list 2211 compressed.pdf என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மட்டுமே இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுப்பித்தல்: கடந்த நிதியாண்டில் புதியது கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து 2023-24ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை 31.12.2023க்குள் புதுப்பிக்க வேண்டும்.
புதியது : நடப்பாண்டில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயின்று புதிதாக விண்ணப்பிக்க விரும்பும்; மாணவ/மாணவியர்கள் முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று, பட்;டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் New Registration என்ற இணைப்பில் சென்று தங்களது விவரங்களை உரிய ஆவணங்களுடன் 31.12.2023க்குள் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள்: தகுதியான மாணவ/மாணவியர்கள் இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் சரியாக உள்ளனவா என 15.01.2024 க்குள் சரிபார்த்தல் வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட National Scholarship Portal (https//scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https//socialjustice.gov.in) பயன்படுத்தி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)
