» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவலர் பயிற்சி பள்ளியில் இறுதித் தேர்வு: எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு

திங்கள் 11, டிசம்பர் 2023 4:51:53 PM (IST)



தூத்துக்குடி பேரூரணியில் காவலர் பயிற்சி பள்ளியில் இன்று நடைபெற்ற பயிற்சி காவலர்களுக்கான சட்ட வகுப்பிற்கான இறுதித் தேர்வை பயிற்சி எஸ்பி பாலாஜி சரவணன்  நேரில் சென்று பார்வையிட்டார்.

தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு சட்டவகுப்பிற்கான இறுதி தேர்வு இன்று துவங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி சட்டவகுப்பிற்கான முதல் நாள் தேர்வை பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர்  மாரிராஜன்  முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  இன்று நேரில் சென்று மேற்பார்வையிட்டார்.

இந்நிகழ்வின்போது காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  சகாய ஜோஸ், திருநெல்வேலி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory