» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

படகில் ராட்சத அலை மோதியதால் கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

ஞாயிறு 10, டிசம்பர் 2023 10:50:29 AM (IST)

திருச்செந்தூர் அருகே படகில் ராட்சத அலை மோதியதால் கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த குரூஸ் மகன் ஆனந்த் (36). இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஜூலியஸ் மகன் ரவிஸ்டன் (30) என்பவரும் நேற்று பகலில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். சுமார் 5 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டு இருந்தனர். 

அப்போது, கடலில் திடீரென்று எழுந்த ராட்சத அலை படகு மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய ரவிஸ்டன் கடலில் தவறி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்த், அவரை காப்பாற்ற கடலில் குதித்தார். இதை பார்த்து அங்கு மீன்பிடித்துக் கொண்டு இருந்த சக மீனவர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களின் உதவியோடு ரவிஸ்டனை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது பேச்சி மூச்சின்றி இருந்த ரவிஸ்டனை உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவிஸ்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆனந்த் ஆலந்தலை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory