» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் இளம்பெண் பரிதாப சாவு: கணவர் படுகாயம்!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 10:48:23 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்துக்குள்ளாகி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மனைவி லதா (30). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பாளையங்கோட்டையில் இருந்து தங்களது ஊருக்கு மோட்டர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வந்தபோது திடீரென மாடு குறுக்கே பாய்ந்தது.
இதனால் பைக் கவிழ்ந்ததில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் லதா பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் ரவிக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










