» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் இளம்பெண் பரிதாப சாவு: கணவர் படுகாயம்!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 10:48:23 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்துக்குள்ளாகி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மனைவி லதா (30). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பாளையங்கோட்டையில் இருந்து தங்களது ஊருக்கு மோட்டர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வந்தபோது திடீரென மாடு குறுக்கே பாய்ந்தது.
இதனால் பைக் கவிழ்ந்ததில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் லதா பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் ரவிக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையில் மதுபானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் : பாஜக கோரிக்கை
புதன் 19, மார்ச் 2025 3:24:03 PM (IST)

தூத்துக்குடியில் புதிய பூங்கா, விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் : மேயர் தகவல்
புதன் 19, மார்ச் 2025 3:17:23 PM (IST)

பெட்ரோலில் எத்தனால் கூடுதலாக கலப்பதால் வாகனங்கள் பழுது: ஆய்வு நடத்த கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:06:01 PM (IST)

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)
