» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சனி 9, டிசம்பர் 2023 5:24:36 PM (IST)

நெல்லையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மாநகராட்சியில் மழை நீர் தேங்கியது. சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பல மணி நேரம் நீடித்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலப்பாளையம் உழவர் சந்தைக்கு பின்புறம் தாழ்வான பகுதிகளில் உள்ள சில குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் மின்சாதன பொருட்கள் மற்றும் தேவையான பொருள்களை முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தினர்.

இதேபோன்று வண்ணாரப்பேட்டை சாலையில் தொடர் மழை காரணமாக கழிவு நீர் வெளியேறியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory