» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

சனி 9, டிசம்பர் 2023 3:38:22 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 மார்ச்/ஏப்ரல்-ல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தங்களது பாடத்தில் 100% தேர்ச்சி பெறச் செய்த அரசு மற்றும் அரசு மான்ய உதவி பெறும் தனியார் பள்ளிகளை சார்ந்த முதுகலை கலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி கல்வி மாவட்ட இடைநிலைக்கல்வி அலுவலர் குருநாதன், கோவில்பட்டி கல்வி மாவட்ட இடைநிலைக்கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன், மாவட்ட திட்ட அலுவலர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை சாந்தினி கௌசல் வரவேற்றார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளை சேர்ந்த 1060 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவம் செய்தும் அனைவரையும் பாராட்டினார். முடிவில் வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

கோவில்பட்டி கோ. சுரேஷ்குமார்Dec 9, 2023 - 04:11:48 PM | Posted IP 172.7*****

மிக்க நன்றி! அனைவருக்கும் பாராட்டுக்கள்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory