» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
சனி 9, டிசம்பர் 2023 3:38:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 மார்ச்/ஏப்ரல்-ல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தங்களது பாடத்தில் 100% தேர்ச்சி பெறச் செய்த அரசு மற்றும் அரசு மான்ய உதவி பெறும் தனியார் பள்ளிகளை சார்ந்த முதுகலை கலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி கல்வி மாவட்ட இடைநிலைக்கல்வி அலுவலர் குருநாதன், கோவில்பட்டி கல்வி மாவட்ட இடைநிலைக்கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன், மாவட்ட திட்ட அலுவலர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை சாந்தினி கௌசல் வரவேற்றார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளை சேர்ந்த 1060 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவம் செய்தும் அனைவரையும் பாராட்டினார். முடிவில் வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)











கோவில்பட்டி கோ. சுரேஷ்குமார்Dec 9, 2023 - 04:11:48 PM | Posted IP 172.7*****