» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி பலி!

சனி 9, டிசம்பர் 2023 11:49:20 AM (IST)

எப்போதும்வென்றான் அருகே செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகேயுள்ள நீராவி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் தங்கையா பெருமாள் (32), இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு காட்டில் செடிகளுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். 

இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜின்னா பீர்முகமது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory