» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவன் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை!

சனி 9, டிசம்பர் 2023 11:39:34 AM (IST)

கோவில்பட்டி அருகே 10ஆம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, முடுக்கலான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது மகன் நிதிஷ்குமார் (15),  குருமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வீட்டிற்கு வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று அவரது தாயார் மந்திதோப்பில் உள்ள கோவிலுக்கு மகனை அழைத்துச் சென்று விபூதி போட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் மாணவன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory