» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகத்தில் தரைதட்டிய எகிப்து கப்பல் மீட்பு!
சனி 9, டிசம்பர் 2023 11:08:52 AM (IST)
தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு உரம் ஏற்றி வந்த எகிப்து நாட்டு கப்பல் தரைதட்டி நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு ஜென்கோ பிரிடேட்டர் என்ற மிகப் பெரிய கப்பல் உரம் ஏற்றி வந்தது. இந்த கப்பல் கடந்த 6ஆம் தேதி புறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு இந்த கப்பல் வந்தது. நுழைவு வாயில் அருகே வந்தபோது அந்த கப்பல் தரை தட்டியது. இதையடுத்து அந்த கப்பல் துறைமுகத்தில் உள்ள இலுவை கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டது.