» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சியில் 11ஆம் தேதி சபா கூட்டம் : ஆணையர் தகவல்!

வெள்ளி 8, டிசம்பர் 2023 9:35:58 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் வருகிற 11ஆம் தேதி திங்கள் கிழமை  சபா கூட்டம் நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள வார்டுகளுக்கு தலா 5 குழுக்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகின்ற 11.12.2023 திங்கள் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற உள்ளது. 

மேற்படி பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

P.S. RajDec 8, 2023 - 10:11:50 PM | Posted IP 172.7*****

கூட்டம் நடைபெறும் இடம் நாள் கிழமை... பற்றி தெளிவாக ஓர் அட்டவணை போடலாமே!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory