» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை!

வெள்ளி 8, டிசம்பர் 2023 4:13:24 PM (IST)



தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு அதிநவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை பெண்கள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். 

இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பெண்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு ஏற்படுகிறது.. எனவே, பெண்கள், மாணவிகள், மற்றும் பயணிகளின் பாதுகாப்பு கருதி பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

MukilaDec 9, 2023 - 07:19:43 AM | Posted IP 172.7*****

Kandipa police station irutha Nala irukum school girls ku useful irukum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory