» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

வெள்ளி 8, டிசம்பர் 2023 9:55:08 AM (IST)



தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊரக உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, சிப்காட், புதியம்புத்தூர், தட்டப்பாறை, மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் அலுவலக போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கி, உட்கோட்ட அலுவலக வளாகம் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின்போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் உட்கோட்ட அலுவலக காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory