» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் கைது

வியாழன் 7, டிசம்பர் 2023 9:31:36 PM (IST)

தூத்துக்குடியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிபோலி பணி நியமன ஆணை கொடுத்து ரூபாய் 4 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஹை ஸ்கூல் தெருவைச் சேர்ந்த நெப்போலியன் மகன் பசும்பொன் முத்துராமலிங்கம் (38) என்பவர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்திருந்த வெளிநாட்டு வேலைக்கான விளம்பர போஸ்டரை பார்த்து நியூசிலாந்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று கருதி அதில் உள்ள தொலைபேசி எண்ணை அழைத்து சிவகங்கை மாவட்டம் T.புதூர் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த காசி மகன் ரகுபதிராஜன் (48) என்பவரிடம் தொடர்பு கொண்டபோது 

ரகுபதிராஜன் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் ரூபாய் 4 லட்சம் ஆகும் என்று கூறி பாஸ்போர்ட்டில் போலியான Work permit Stamping மற்றும் Work ஆர்டர் அனுப்பி பசும்பொன் முத்துராமலிங்கத்தை நம்ப வைத்து ஏமாற்றி அவரிடமிருந்து கடந்த 21.01.2022 ம் தேதி முதல் 19.05.2023 வரை ஆகிய நாட்களில் மொத்தம் ரூபாய் 4 லட்சம் பணத்தை பெற்று கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும் பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். 

இதுகுறித்து பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளர் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, ரகுபதிராஜனை கடந்த 05.12.2023 அன்று சிவகங்கை மாவட்டம் T.புதூர் ஆக்ஸ்போர்டு நகரில் வைத்து கைது செய்து நேற்று தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் - IV ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர்.
 
மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ரகுபதிராஜன் இதே போன்று பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூபாய் 2 கோடி பணத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory