» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்!
வியாழன் 7, டிசம்பர் 2023 5:48:00 PM (IST)

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நாகர்கோவில் திருசிலுவை கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்.
நாகர்கோவில் திருசிலுவை கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு வரலாற்று துறை மாணவிகள் கடந்த 21 நாள்களாக நெல்லை அருங்காட்சியகத்தில் நடந்த உள் விளக்கப் பயிற்சியில் கலந்துகொண்டனர். இந்த பயிற்சியில் அருங்காட்சியகம் குறித்தும், அதன் வகைப்பாடுகள், செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு நாளையொட்டி அவர்கள் கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்கள், ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இதற்காக நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி தலைமையில் பயணம் செய்தனர். கிருஷ்ணாபுரத்தில் உள்ள சிற்பங்களை மாணவிகள் பார்வையிட்டனர். அவர்கள் குறவன் இளவரசியை தூக்கி செல்லும் சிற்பம், குறத்தில் இளவரசனை தூக்கிச்செல்லும் சிலை, கர்ணம், அர்ச்சுணன், ரதி, மன்மதன், பீமன், தர்மன், புருஷா மிருகம் உள்பட பல்வேறு சிறப்பங்கள் பார்வையிட்டனர்.
இந்த கலை சிற்பங்கள் குறித்தும் அதன் நுணுக்கங்கள் குறித்தும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார்.அதன் பின் அவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பார்வையிட்டனர். அவர்களுக்கு பி சைட்டில் வைத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமளித்தார்.
அங்கு வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி, முழு உடல் மனிதனின் எலும்பு கூடு, புதிதாக அமையவிருக்கும் அருங்காட்சியம் மாதிரி, உள்பட அங்கு வைத்திருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். இந்தியாவிலேயே முதன்முதலில் அமைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை அவர் பார்வையிட்டனர்.
மேலும், அலெக்சாண்டர் இரியா 100 வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்த இடம் 2023ல் ஆய்வு செய்த இடங்கள் மற்றும் தங்கம் மற்றும், இரும்பு வெண்கல பொருள்கள் எடுக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு உள்ள கறுப்பு சிவப்பு பானையோடுகளில் வகைகளை பார்வையிட்டனர்.
மேலும் நெற்உமி, மனித பற்கள், எலும்பு கூடுகளையும், முதுமக்கள் தாழிகளையும் பார்வையிட்டனர். ஆய்வு செய்வது குறித்தும், ஆதிச்சநல்லூர் சைட் குறித்தும் ஆய்வு மாணவி திவ்யா விளக்கமளித்தார். ஆய்வு ஏற்பாடுகளை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










