» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் வினாடி-வினா போட்டி

வியாழன் 7, டிசம்பர் 2023 5:14:35 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அகிலன், நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். வினாடி-வினா போட்டிக்கான ஆரம்ப சுற்றில் எட்டு அணிகள் பங்கேற்றனர்.  அதிலிருந்து 5 அணிகள் மட்டும் பிரதான சுற்றிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.  

அறிவியல் கண்காட்சியில் 31 அணிகள் பங்கேற்றனர்.  பின்னர் நடைபெற்ற நிறைவு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பா.பத்மாவதி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக அறிவியல் கழக செயலாளர் ஹரிதா கிருஷ்ணன் நன்றியரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory