» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் டிச.9ல் தேசிய மக்கள் நீதிமன்றம்!

புதன் 6, டிசம்பர் 2023 7:47:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 9ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 09.12.2023 அன்று முதன்மை மாவட்ட நீதிபதி  செல்வம் தலைமையில்  தேசிய மக்கள் நீதிமன்றம்  நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர், ஶ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் தாலுகா நீதிமன்றம் உட்பட 13 அமர்வுகளில்  சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள்,  அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள்,   வங்கி மேலாளர்கள் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory