» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அகில இந்திய பெஞ்ச் பிரஸ் போட்டியில் பதக்கம் வென்று தூத்துக்குடி வீரர்கள் சாதனை
வியாழன் 30, நவம்பர் 2023 9:32:11 PM (IST)

அகில இந்திய பெஞ்ச்பிரஸ் போட்டியில் தூத்துக்குடி வலுதூக்கும் வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
பவர் இந்தியா வலுதூக்கும் சங்கத்தின் சார்பில், கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நவம்பர் 22 முதல் 26 வரை நடைவெற்ற 28-வது அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் பெஞ்ச்பிரஸ் போட்டியில், தமிழகத்தின் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த சின்னதுரை மற்றும் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாஸ்டர்ஸ் பிரிவில் தலா இரண்டு தங்கம் பதக்கங்கள் பெற்றதுடன் புதிய சாதனையும் படைத்துள்ளார்கள்.
மேலும், சுந்தர்ராஜன் கலந்துகொண்டு ஒரு தங்கம், ஒரு வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்க்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளார். வெற்றி பெற்ற வீரர்களை தூத்துக்குடி மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பாக தலைவர் அன்னை ஜீவல்லர்ஸ் பால்தங்கம் ராஜேஷ், செயலாளர் தமிழரசன், துனை செயலாளர்கள் வைரவேல், மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










