» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கு!

வியாழன் 30, நவம்பர் 2023 3:17:02 PM (IST)



தூத்துக்குடி மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக ஸ்காட் குழும ஹோம் சயின்ஸ் சிறப்பியல் சுமதி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சிறுதானிய உணவு முறையை நாம் கையாண்டால் தான் உடல் பலப்படும். நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். சிறுதானிய உணவுகளை புறக்கணிக்காமல் அவற்றை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அன்றாட உணவுடனே சேர்த்துக்கொள்ள வேண்டும். 

அப்போது தான் நோய்களை தடுக்க முடியும். தற்போது ஏராளமான சிறுதானிய உற்பத்தி பொருள்கள் சந்தைக்கு வந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி இருந்தாலும், சிறுதானியங்களை விவசாயம் செய்து பலன் பெறலாம் என்று கூறினார். சிறுதானிய மாதிரி பொருள்களையும் அவர் மாணவர்களுக்கு காட்டினார். மேலும், சிறுதானிய உணவு உற்பத்தி செய்யும் நவீன இயந்திரங்கள் கிடைக்கும் இடங்களையும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் விக்னேஷ் மற்றும் இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் மெக்லுரட் ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory