» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாம்பு கடித்த முதியவருக்கு விஷமுறிவு சிகிச்சை!
வெள்ளி 24, நவம்பர் 2023 8:13:12 PM (IST)

புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்த முதியவருக்கு விஷமுறிவு மருந்தின் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் மேல கூட்டுடன்காடு கிராமத்தை சார்ந்த 64 வயதுடைய முத்துராஜன் என்பவருக்கு பாம்பு கடித்தது. பாம்பு கடித்த நபரை உடனடியாக அருகிலுள்ள புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
உடனடியாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஹேமலதா தலைமையில், டாக்டர்.வினோதினி ஆகியோர் பாம்பு கடி நபருக்கு விஷம் முறிவு மருந்து (Anti SnakeVenom - ASV) கொடுத்து முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.பொற்செல்வன் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பொதுமக்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடிக்கான முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொரியர் பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : போலீசார் விசாரணை!
வியாழன் 11, டிசம்பர் 2025 9:19:00 PM (IST)

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை எதிர்த்து பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:54:06 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:46:53 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:30:35 PM (IST)

உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம் : இழப்பீடு வழங்க மக்கள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:24:52 PM (IST)

ஓய்வூதியப் பலன்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:18:53 PM (IST)










