» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதூரில் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி: மாணவ, மாணவியர் பங்கேற்பு

வெள்ளி 24, நவம்பர் 2023 8:08:41 PM (IST)



விளாத்திகுளம் அருகே புதூரில் மாணவ, மாணவியர்கள் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு  பேரணி மேற்கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து புதூர்  பேரூராட்சி வளாகம் வரை சிறப்பு சுருக்கம் முறை திருத்தம் 25. 11. 2023 மற்றும் 26. 11. 2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கு உண்டான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை கோஷங்களாக எழுப்பி கொண்டு   தேர்தல் விழிப்புணர்வு பேரணியாக நடை பயணம் மேற்கொண்டனர். 

இந்த வாக்காளர் சிறப்பு முகாம்  விழிப்புணர்வு பேரணிக்கு விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் தலைமை வகித்தனர், தலைமை ஆசிரியை அன்னைஷீபாபிளவர் லெட், வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர்   யுவராம்,  மற்றும்  ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory