» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

வெள்ளி 24, நவம்பர் 2023 5:35:47 PM (IST)



கோவில்பட்டி   சொர்ணா கல்வி நிறுவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனத்தில் வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர் நவநீத கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆசிரியர் பாண்டி செல்வி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட புகையிலை தடுப்பு திட்ட மருத்துவ அலுவலர் ரேணுகா,சுகாதார கல்வியாளர் முத்துசாமி ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லையா,சசி கணேஷ்,நவீன்,உள்பட சுகாதார அலுவலர்கள்,கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் தேவி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory