» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும்: சிஐடியூ கோரிக்கை

திங்கள் 20, நவம்பர் 2023 4:55:52 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் என உள்ளாட்சி ஊழியர் சங்கம் சிஐடியூ கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி காயல்பட்டினம் திருச்செந்தூர் கோவில்பட்டி ஆகிய நகராட்சிகளும் 18 பேரூராட்சிகளும் 43 கிராம பஞ்சாயத்தும் உள்ளது

இந்த உள்ளாட்துறையில்தூய்மை பணியாளர்கள் ஓட்டுநர்கள் OHT ஆப்ரேட்டர்கள் தூய்மை காவலர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 2017 அக்டோபர் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசால் 2D(63)அரசாணை வெளியிடப்பட்டது
 
இந்த அரசாணை படி ஊதியம் வழங்கப்படவில்லை. எங்கள் சங்கம் தொழிலாளர்கள் சார்பில் தொடர்ந்து மேற்கண்ட அரசாணைப்படி ஊதிய வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி யும் தமிழ்நாடு அரசாணை2D (63) படிம் மேற்கண்ட பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் அகவிலைப்படியும் சேர்த்து வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் உறுதியளித்துள்ளார்.

மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒருநாள் ஊதியமாக தூய்மை பணியாளர்களுக்கு ரூ725/

குடிநீர் பணியாளர்களுக்கு ரூ763/ ஓட்டுனர்களுக்கு ரூ 763/ டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ725/

நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒருநாள் ஊதியமாக தூய்மை பணியாளர்களுக்கு ரூ610/

குடிநீர் பணியாளர்களுக்கு ரூ/687 ஓட்டுனர்களுக்கு ரூ 687/ டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ610/

பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒருநாள் ஊதியமாக தூய்மை பணியாளர்களுக்கு ரூ533/

குடிநீர் பணியாளர்களுக்கு ரூ610/ ஓட்டுனர்களுக்கு ரூ 610/ டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ533/

கிராம ஊராட்சியில் மாத ஊதியமாக தூய்மை பணியாளர்களுக்கு ரூ11848/

OHT ஆப்ரேட்டர்களுக்கு ரூ13848/ வழங்கிடவும்

மேற்கண்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு பிரதி மாதம் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கிடவும் பணியாளர்களிடம் பிடித்தம் செய்யவேண்டிய EPF&ESI பங்குத் தொகையை பிடித்தம் செய்து ஒப்பந்ததாரரின் பங்குத் தொகையுடன் சேர்த்து உரிய கணக்கில் செலுத்தவும் அதற்கான ரசீது தொழிலாளர்களுக்கு வழங்கிடவும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கிடவும் மருத்துவ பரிசோதனை உரிய காலத்தில் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory