» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தொடர் மழை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
திங்கள் 20, நவம்பர் 2023 7:55:11 AM (IST)

தூத்துக்குடியில் பெய்த தொடர் மழையால் மரக்கிளை முறிந்து மின் கம்பத்தில் விழுந்தது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சியானது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிக்கு நகருகிறது. இக்காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்தது. தூத்துக்குடி மாநகராட்சி மேல ரத வீதியில் உள்ள பள்ளியின் எதிர்புறம் மரம் ஒன்று மழை காரணமாக முறிந்து மின் வயர்களின் மீது விழுந்ததாக பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் அளித்த தகவலை தொடர்ந்து அதனை உடனடியாக அப்புறப்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளிடம் கூறினார். மேலும் வெற்றிவேல்புரத்தில் உள்ள மழை நீர் வடிகாலையும் பார்வையிட்டார்.
வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர். தூத்துக்குடியில் 8.3 மி.மீ., குலசேகரப்பட்டணம் 15மி.மீ., சாத்தான்குளம் 20.8 மி.மீ., திருச்செந்தூர், காயல்பட்டிணம் 33 மி.மீ., என மழை பதிவாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை மக்கள் நலம் பெற தூத்துக்குடியில் வேள்வி பூஜை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:17:19 PM (IST)

ஆலமரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் - விசாரணை நடத்த கோரிக்கை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:14:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு : 8 மையங்களில் நடைபெற்றது
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:40:27 PM (IST)

பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவர் கைது!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:37:30 PM (IST)

தொடர் மழை: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:34:43 PM (IST)

நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஞாயிறு 10, டிசம்பர் 2023 11:15:23 AM (IST)
