» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கை சேதப்படுத்தி, வாலிபரை தாக்கிய 2பேர் கைது!

செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:12:19 AM (IST)

தூத்துக்குடியில் கத்தியால் வெட்டி பைக் டயரை சேதப்படுத்தி, வாலிபரை தாக்கியதாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம். இவரது மகன் முத்துக்குமார் (20). மீனவர். இவர் சம்பவத்தன்று பைக்கில் முனியசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்ற சூசை நகரைச் சேர்ந்த முத்தையா மகன் ரூபன் ராஜ் (21), திருமாஜி நகரைச் சேர்ந்த சிவனைந்த பெருமாள் மகன் ஆறுமுகம் என்ற அஜித் (21) ஆகிய 2 பேரும் அவரை கேலி செய்துள்ளனர்.

அதை முத்துக்குமார் தட்டிக்கேட்கவே, அவரை 2 பேரும் அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கத்தியால் முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளின் 2 டயர்களையும் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து முத்துக்குமார் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குப்பதிவு செய்து ரூபன் ராஜ், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory