» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:08:47 AM (IST)
கோவில்பட்டியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், காந்தி ஜெயந்தி நாளில் அந்த சாலையில் வாழை மரம் நடும் போராட்டத்திற்கு த.மா.கா.வினர் ஏற்பாடு செய்தனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக த.மா.கா. நகர தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் கையில் வாழை மரக்கன்றுடன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாழை மரக்கன்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் தாலுகா அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










