» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது : இருசக்கர வாகனம், செல்போன் பறிமுதல்!
திங்கள் 2, அக்டோபர் 2023 11:42:03 AM (IST)

குரும்பூர் அருகே சட்டவிரோதமாக லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2948 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர் அருள் மோசஸ், தலைமை காவலர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது அம்மன்புரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர் மேலபுதுக்குடி பகுதியைச் சேர்ந்த சுடலைமகன் முருகேசன் (62) என்பதும் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் முருகேசனை கைது செய்து அவரிடமிருந்த ரூ.1லட்சம் மதிப்புள்ள 2948 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், இருசக்கர வாகனம், ஒரு செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
ஓட்டு போட்ட முட்டாள்Oct 2, 2023 - 11:48:56 AM | Posted IP 162.1*****
அப்போ கோவைல ஓணம் பரிசுக்கு 25 கோடி வென்ற தமிழர்களை கண்டால் மூடிட்டு இருபங்களாம். நாங்க எல்லாம் இளித்த வாயனுங்க. போங்கய்யா குடிகார முட்டாள் பொறாமை பிடித்த துட்டு ஆட்சியும்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)











ஓட்டு போட்ட முட்டாள்Oct 2, 2023 - 11:51:32 AM | Posted IP 162.1*****