» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 15 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி: அமைச்சர், மேயர் பங்கேற்பு

ஞாயிறு 1, அக்டோபர் 2023 10:41:39 AM (IST)



தூத்துக்குடியில் 15 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரை மாவட்டங்களில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் கிரீன் நாடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து  1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 163 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 லட்சம் பனை விதைகள் நடும் துவக்க விழா   தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரையில் நடைபெற்றது. மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பனை விதைகள் நட்டு துவக்கி வைத்தனர். 

இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி மாநகரச் செயலாளர் உதயசூரியன், நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் மாநகர வார்டு செயலாளர்கள் செந்தூர் பாண்டி செல்வராஜ் வாகைகுளம் ராஜா மற்றும் ஆல் கண் டிரஸ்ட் நிறுவனர் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், காமராஜ் கல்லூரி என்சிசி பேராசிரியர் ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

. செல்வகுமார், நிறுவனர் & மாநில தலைவர், தமிழ் நாடு காங்கிரஸ்.Oct 1, 2023 - 06:51:47 PM | Posted IP 172.7*****

முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 163 கிலோ மீட்டர் பரப்பளவில் பனைவிதைகள் படும் விழா நடத்தப்பட்டு வருகிறது.இதனால் எந்த பயனும் இல்லை.பனைஏறிகள் என்று சொல்லக்கூடிய சாணார் ஜாதி மக்கள் பனை மரத்தில் இருந்து கள் இறக்கக் கூடாது என்றும் கள் விற்பனை செய்யக் கூடாது என்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சர் ஆக இருக்கும் போது அரசு ஆணை பிறப்பித்தார்.கள் விற்பனை செய்பவர்களை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு ஆணையை கடுமையாக்கினார். ஆனால் தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் மதுரை மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய தென்மாவட்டங்களில் வாழும் நாடார் ஜாதி மக்களும் சாணார் ஜாதி மக்களும் கள் விற்பனை செய்து வருகிறார்கள்.காவல்துறை நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது.ஏனென்றால் கள் இறக்குகிறவர்களும் கள் விற்பனை செய்பவர்களும் திமுக மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.மேலும் கவிஞர் கனிமொழி எம்பி அவர்கள் தாயார் ராஜாத்தி அம்மாள் ஜாதியாம்‌.மேலும் பனங்காட்டு படை தலைவர் ஹரி நாடார் மற்றும் நாடார் மக்கள் சக்தி தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார் ஆகியோர் உறவினர்களாம். இந்த காலத்தில் யார் பனை ஓலையில் வீடு கட்டுகிறார்.பனைமரத்தில் பனைநாரில் யார் கட்டில் கட்டி படுத்து வருகிறார்.பனைகிழங்கையும் நொங்கையும் மட்டும் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.அனைத்து ஜாதி மக்களும் ஸ்டீல் கட்டில் கிங்சைஸ் கட்டில் குயின் சைஸ்கட்டில் டபுள்ஸ் பெட் கட்டில் சிங்கிள் சைஸ் கட்டில் என பர்னிச்சர் கடைகளில் வாங்கி படுத்து வருகிறார்கள். இந்த காலத்தில் பனைஏறிகள் குறைந்து விட்டார்கள்.பனைஏறிகள் தமிழ் நாட்டிலும் பிற மாநிலங்களிலும் கடைகள் வைத்து வாழ்ந்து வருகின்றனர்.மேலும் அதிமுக திமுக ஆகிய கட்சிகள் எம்எல்ஏ எம்பி கவுண்சிலர் மேயர் துணை மேயர் சேர்மன் துணை சேர்மன் ஆகிய பதவிகள் வழங்கி வருகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital











Thoothukudi Business Directory