» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விநாயகர் சதுர்த்தி விழா : அமைச்சர், மேயர் பங்கேற்பு..!

திங்கள் 18, செப்டம்பர் 2023 7:59:42 PM (IST)



தூத்துக்குடி ஸ்ரீ போத்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பங்கேற்றனர்.

தூத்துக்குடி புதிய பஸ்நிலைய நுழைவுவாயிலை ஒட்டியுள்ள ஸ்ரீ போத்தி விநாயகர் ஆலயம், 1981-ல் தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ என்.பெரியசாமியால் சீரமைக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக விழாக்கள் நடைபெற்று வருகிறது. என்.பெரியசாமி தனது இறுதி காலம் வரை இக்கோவிலில் தர்மகர்த்தாவாக இருந்தார். அவரை தொடர்ந்து, அவரது பிள்ளைகளான அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் என்.பி.ஜெகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இக்கோவிலை பராமரித்து வருகின்றனர். தற்போது அவரது மகனான என்.பி.ராஜா இக்கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார்.
          
இந்நிலையில், ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில்  விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடைபெற்ற பூஜைகளில் சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, என்.பி.ராஜா, என்.பி.அசோக் மற்றும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் மாநகராட்சி கவுன்சிலர் கீதாமுருகேசன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை தொடர்ந்து காலை 10 மணிக்கு அன்னதானத்தை அமைச்சர் மற்றும் மேயர் தொடங்கி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory